ஊழலை ஒழிப்பதற்கான சட்டப்பூர்வமான மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், எட்டு பேர் கொண்ட அமைச்சரவை கமிட்டி, கடந்த வாரம் அமைக்கப்பட்டது.
இதை போல நாமும் எழுதினால் ஒரு கற்பனை.
திருடன் எல்லாம் சேர்ந்து தலைமை திருடன் தலைமையில் தெருக்கூட்டம் போட்டங்கலாம் "திருட்டை ஒழிப்பது எப்படி".
ரம்ஜான் அன்னைக்கு நைட்டு நம்ம கறிக்கடை காதர் தலைமையில் சொற்பொழிவு, தலைப்பு "ஜீவகாருண்யம்". கூடத்துக்கு வர்றவங்களுக்கு கோழி பிரியாணி ப்ரீ.
கள்ளுண்ணாமை தலைப்பில் உரை, உரையாற்றுபவர் டாஸ்மாக் தலைவர் நெப்போலியன் IAS .
உங்களுக்கும் எதாவது இது போல தோன்றினால் எழுதுங்கள்
ennam
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 11 ஜனவரி, 2011
அத்தியாயம் - 1
நீங்க இப்ப ஒரு விவசாயின்னு வச்சுக்கிங்களேன், சும்மா ஒரு பேச்சிக்குதான்
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இப்ப, நீங்க விவசாய நிலம் வாங்கிறது அவ்வளவு ஈசியான விஷயம் இல்ல.
எனக்கு தெரிஞ்சு எங்க ஊர்ல ஒருத்தர் ஒரு ஏக்கர் ருபாய் 25 ஆயிரத்துக்கு வித்தார், என்ன ஒரு 10 வருஷம் முன்ன இருக்கும், எத்தன ஏக்கர் தெரியுமா? சுமார் ஒரு 25 ஏக்கர், இப்ப அந்த நெலத்த பாத்து பேரு மூச்சுதான் விட முடியுது அவராலா.
ஆனா அந்த விலைக்கே அப்ப வாங்க ஆளில்ல, தேடிப்பிடிச்சு வித்து தான் பொண்ணுங்க கல்யாணத்த பண்ணார், அது ஒரு தனி கத, நம்ம மேட்டர்க்கு வருவோம்.
உங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கு, இப்ப அதுல நாம விவசாயம் பண்ண போறோம்.
என்ன பண்ணலாம், நெல் போடுவோம், ஆனா நெல் வருமா அந்த நெலத்துலன்னல்லாம் நீங்க கேக்கப்படாது, ஏன்னா உங்க தாத்தா அத தான் போட்டார் உங்க அப்பா அததான் போட்டார் நாமளும் அதையே போடபோறோம்.
நெல்லு நடரத்துக்கு மொதல்ல நாம நாத்து விடனும், அதுக்கு நிலத்த ரெடி பண்ணனும்.
நிலத்த ரெடி பண்ண முதல்ல தண்ணி விடனும், அதுக்கு முதல்ல கரண்டு இருக்கான்னு பாக்கணும்.
இது ஒன்னும் சென்னை இல்லங்க, எப்படியாச்சம் கிராமத்தில இருக்கிறவன ஏமாத்தி 4 இல்லன்ன 5 மணி நேரம் கரண்டு அவனுக்கு விடாம நாமலே எடுத்துக்கிட்டு இந்த கரண்ட பிரிச்சி inox சத்யம் தியேட்டர்னு, அஞ்சு பைசா நமக்கு புரோஜனப்படாத, எவனோ நோகாம நொங்கு திங்கறதுக கூட தெரியாம அவன் கட்டவுட்டுக்கு பால ஊத்திகிட்டு இருக்க.
இது கிராமம், உங்க நல்ல நேரம் உங்க வயல் மோட்டார் கொட்டகை பக்கத்திலேயே இருந்து, கரண்டும் இருந்து, நிக்காம வந்தா ஒரு நாள் புல்லா மோட்டாரும் ஓடினா, நீங்க நாத்து நடுற வயலுக்கு தண்ணி கட்டிருவீங்க.
இருங்க அதுக்குள்ளே மோட்டரை ஆன் பண்ணாதீங்க, இன்னும் கால்வாயெல்லாம் செத்தி தண்ணி போற வழி சரிபடுத்தனும் அப்பத்தான் தண்ணி பிரச்சனை இல்லாம உங்க வயலுக்கு போகும்.
நல்ல வயல் காய்ஞ்சு போயிருந்தா, கொஞ்சம் கஷ்டமா இருக்கும், ஆனா புல்லு பூண்டெல்லாம் ஈஸியா கொத்தி எடுத்துடலாம்.
"என்னங்க இது உள்ள என்ன இருக்குன்னே தெரியாத அளவுக்கு செடி கொடிஎல்லாம் இருக்கு", உள்ள ஏதாவது பாம்பு தேளு இருந்து கடிச்சா.
யோசிச்சு பாருங்களேன் இப்ப நீங்க உங்க வசதிக்கு ஏற்ப காரோ, பைக்கோ ஓட்டிகிட்டு உங்க ஆபீஸ்ல இருந்து உங்க வீட்டுக்கு வருவீங்க உங்க வீட்டுலேயும் சிரிச்சுகிட்டோ சிரிக்காமலேயோ உங்க பை ஹெல்மெட் இத எல்லாம் உங்க கிட்ட இருந்து வாங்கிட்டு போய் அதுஅது எடத்துல வைப்பாங்க, நீங்களும் ஹாயா போய் சோபால உக்காந்து உடனே டிவி ரிமோட்ட கைல எடுத்து டிவி பாப்பீங்க, அவங்க போய் உடனே உங்களுக்கு காபி போட்டு எடுத்துக்கிட்டு வந்து கொடுப்பாங்க நீங்களும் ரசிச்சோ ரசிக்காமலோ குடிப்பீங்க.
இப்படி இல்லாம, உங்க பொண்டாட்டி கதவ தொறக்குரப்போ உங்கள பாம்போ தேளோ கடிச்சு, உங்கள் நாலு பேறு தூக்கிட்டு வந்து நின்னா அவங்களுக்கு எப்படி இருக்கும், இதுதாங்க விவசாயியோட நெலம.
ஹலோ எங்க ஓடுறீங்க, வாங்க விவசாயம் பண்ணலாம்
சனி, 8 ஜனவரி, 2011
விலைவாசி - விவசாயம் - விவசாயி - பொருளாதாரம்
என்ன காய்கறி எல்லாம் இந்த வெல விக்குது!!! என்னதான் பண்றது!!!
சாம்பார் பொரியல் எல்லாம் வைக்கறதா இல்லியா ஒன்னும் தெரியில, இந்த கவர்மென்ட்டு என்னதான் பண்ணுது,
இந்த வருஷம் எலக்ட்ஷன் மட்டும் வருட்டும் பாரேன், நான் எதிர்கட்சிக்குதான் வோட்டு போட போறேன், பின்ன என்ன.
ஆமான் அவன் வந்தா மட்டும் என்ன பண்ண போறான், அவனுங்களும் கொள்ள தான் அடிப்பானுங்க, எவன் நம்ம கஷ்டத்த போக்க போறான் என்று புலம்புவரா நீங்கள்.
கொஞ்சம் நியூஸ் எல்லாம் சீரியல் வெளம்பர இடவேலையில லேசா கேக்குற ஆளா இருந்தா, இன்னும் கொஞ்சம் கேள்வி வரும்
"ஏம்ப்பா, இந்த கவர்மெண்டுதான் இந்த விவசாயிகளுக்கு எம்மா சலுக பண்ணுது" கரண்டு ப்ரீயாம், உரம் மானியம் தருதாம், வெத அப்புறம் லோன் எல்லாம் தள்ளுபடி பண்றாங்க,
எங்க பக்கத்து வீட்டுகாரன்களோட சொந்தகாரங்களுக்கெல்லாம் நாப்பதாயிரம் அம்பதாயிரம் தள்ளுபடியாம் அவுங்க சம்சாரம் செயின் வாங்கி போட்டு இருக்குன்னு சொல்லறாங்க.
"நமக்கும் கொஞ்ச நெலம் இருந்தா ஊருக்கு போய் விவசாயம் பாக்கலாம் போல இருக்கு" என்று சொல்லுபவரா உங்களுக்காகவே இந்த பகுதி.
இதற்கு நீங்கள் முதலில் விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
"சும்மா நிறுத்துப்பா அப்ப பிளைட்டுல போகனுன்ன பிளைட் ஓட்ட தெரியனுமா" என்று நீங்கள் சொல்லுவது எனக்கு கேட்கிறது.
இன்னும் சில பேர் "ஹலோ நாங்கெல்லாம் மம்புட்டிய தூக்கி பாத்துட்டு முடியாமதான் இங்க வந்து இந்த வேலை பாக்குறோம் நீ சும்மா நிறுத்தப்பா" என்றும் சொல்லலாம்.
ஆன என்ன பண்ண இது ப்ளாக் என்ன தடுத்து நிறுத்த முடியாது, முடிஞ்சா படிச்சு பாத்துட்டு "என்னமோ எழுதி இருக்கார் நாமளும்தான் கருத்து சொல்வோமே" என்று உங்கள் கருத்துக்களை சொன்னால் எனக்கு சந்தோஷமே.
இனி வரும் அத்தியாயங்களில் விவசாயம் பற்றி பார்போம்
இதற்கு நீங்கள் முதலில் விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
"சும்மா நிறுத்துப்பா அப்ப பிளைட்டுல போகனுன்ன பிளைட் ஓட்ட தெரியனுமா" என்று நீங்கள் சொல்லுவது எனக்கு கேட்கிறது.
இன்னும் சில பேர் "ஹலோ நாங்கெல்லாம் மம்புட்டிய தூக்கி பாத்துட்டு முடியாமதான் இங்க வந்து இந்த வேலை பாக்குறோம் நீ சும்மா நிறுத்தப்பா" என்றும் சொல்லலாம்.
ஆன என்ன பண்ண இது ப்ளாக் என்ன தடுத்து நிறுத்த முடியாது, முடிஞ்சா படிச்சு பாத்துட்டு "என்னமோ எழுதி இருக்கார் நாமளும்தான் கருத்து சொல்வோமே" என்று உங்கள் கருத்துக்களை சொன்னால் எனக்கு சந்தோஷமே.
இனி வரும் அத்தியாயங்களில் விவசாயம் பற்றி பார்போம்
சனி, 18 செப்டம்பர், 2010
டிராபிக் சிக்னல்
இது நீண்ட நாட்களாகவே என் மனதில் தோன்றிய ஒரு விஷயம், சில நேரங்களில் எரிச்சல் சில நேரங்களில் ஆத்திரம் சில நேரங்களில் இயலாமை சில நேரங்களில் கோபம் ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.
ஒன்னும் இல்லைங்க எந்த டிராபிக் சிக்னல் படுத்தும் பாடுதான், நம்ம ஊரில சிக்னல் ஒழுங்க இருந்தாலே யாரும் மதிக்க மாட்டங்க, இதுல எப்ப வொர்க் ஆகும் எப்ப வொர்க் ஆகாதுன்னே தெரியாது, நான் ரொம்ப நாள் கழிச்சுதான் அத கண்டு புடிச்சேன், காலையில நீங்க அவசரமவசரமா ஆபீஸ் போகும் பொது இந்த கிண்டி பாலத்த தான்ற வரைக்கும் ஒன்னும் தெரியாது பாலத்து மேல ஏறி ஏறங்குவீங்க பாருங்க அப்ப கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் நிக்கும் வண்டி, எனக்கு அப்பல்லாம் கம்பராமாயனத்துல ராமன் கூட போன குரங்கு ஞாபகம் தாம் வரும், ஒரு வண்டி குறுக்கால நாலஞ்சு வண்டிக அத சுத்தி நின்னுகிட்டு யாராலையும் போகமுடியாத மாதிரி ஒரு தினுசான கோணத்துல நிப்பாங்க, ஆனா சும்மா சொல்லக்கூடாது நம்ம ஆளுங்க தெறமையே தனி ஒரு நாள் நின்ன கோணத்துல மறு நாள் நிக்க மாட்டாங்க.
அதிலேயும் இந்த ஆட்டோ காரர்கள் ஓட்ற விதம் அப்பப்பா, எனக்கு மட்டும் இதை மூணு சக்கரத்தில ஓட்டலாம்னு கண்டுபிடிச்சது யார்னு தெரிஞ்சதுன்னு வைச்சுக்குங்களேன் என்ன பண்ணுவேன்னு கேட்குறிங்களா ஒண்ணுயம் பண்ண மாட்டேன், அவர கூட்டிட்டு வந்து சிக்னல் வேலை செய்யாத நேரத்த பாத்து கிண்டி பாலத்துல இருந்து அசோக் பில்லர் வரைக்கும் டெய்லி பத்து தரவ பைக் ஓட்ட சொல்லுவேன்.
எதுல என்ன கொடுமைன்ன இந்த சிக்னல் அப்ப அப்ப வேலை செய்யலன்னு அங்க நிக்கிற போலீஸ்க்கு தெரியும் இருந்தாலும் எது அவர்களை தடுக்குதுன்னு எனக்கு தெரியலை.
இது குறித்து கவலைப்பட யாருக்கும் நேரமில்லை, வாழ்க்கையை எப்படி ஓட்டுவது என்பதே பெரிய பிரச்சனையாய் இருக்கையில் எந்த டிராபிக்கில் வண்டி ஓட்டுவது ஒரு பெரிய பிரச்னை இல்லை என்று அவர்கள் நினைத்து இருக்கலாம்.
பரிணாம வளர்ச்சியில் மனிதன் முதுகெலும்பை இழக்கபோகிறானோ என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே சாட்சியாய் இருக்கின்றன, உண்மையாய் முதுகெலும்பை இழப்பதுதான் இழப்பதல்ல
இதுபோன்றவற்றுடன் வழ்வதுகூட முதுகெலும்புடன் இல்லாமல் வாழ்வதற்கு ஒப்பானதே(என்னையும் சேர்த்துதான்).
ஒன்னும் இல்லைங்க எந்த டிராபிக் சிக்னல் படுத்தும் பாடுதான், நம்ம ஊரில சிக்னல் ஒழுங்க இருந்தாலே யாரும் மதிக்க மாட்டங்க, இதுல எப்ப வொர்க் ஆகும் எப்ப வொர்க் ஆகாதுன்னே தெரியாது, நான் ரொம்ப நாள் கழிச்சுதான் அத கண்டு புடிச்சேன், காலையில நீங்க அவசரமவசரமா ஆபீஸ் போகும் பொது இந்த கிண்டி பாலத்த தான்ற வரைக்கும் ஒன்னும் தெரியாது பாலத்து மேல ஏறி ஏறங்குவீங்க பாருங்க அப்ப கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் நிக்கும் வண்டி, எனக்கு அப்பல்லாம் கம்பராமாயனத்துல ராமன் கூட போன குரங்கு ஞாபகம் தாம் வரும், ஒரு வண்டி குறுக்கால நாலஞ்சு வண்டிக அத சுத்தி நின்னுகிட்டு யாராலையும் போகமுடியாத மாதிரி ஒரு தினுசான கோணத்துல நிப்பாங்க, ஆனா சும்மா சொல்லக்கூடாது நம்ம ஆளுங்க தெறமையே தனி ஒரு நாள் நின்ன கோணத்துல மறு நாள் நிக்க மாட்டாங்க.
அதிலேயும் இந்த ஆட்டோ காரர்கள் ஓட்ற விதம் அப்பப்பா, எனக்கு மட்டும் இதை மூணு சக்கரத்தில ஓட்டலாம்னு கண்டுபிடிச்சது யார்னு தெரிஞ்சதுன்னு வைச்சுக்குங்களேன் என்ன பண்ணுவேன்னு கேட்குறிங்களா ஒண்ணுயம் பண்ண மாட்டேன், அவர கூட்டிட்டு வந்து சிக்னல் வேலை செய்யாத நேரத்த பாத்து கிண்டி பாலத்துல இருந்து அசோக் பில்லர் வரைக்கும் டெய்லி பத்து தரவ பைக் ஓட்ட சொல்லுவேன்.
எதுல என்ன கொடுமைன்ன இந்த சிக்னல் அப்ப அப்ப வேலை செய்யலன்னு அங்க நிக்கிற போலீஸ்க்கு தெரியும் இருந்தாலும் எது அவர்களை தடுக்குதுன்னு எனக்கு தெரியலை.
இது குறித்து கவலைப்பட யாருக்கும் நேரமில்லை, வாழ்க்கையை எப்படி ஓட்டுவது என்பதே பெரிய பிரச்சனையாய் இருக்கையில் எந்த டிராபிக்கில் வண்டி ஓட்டுவது ஒரு பெரிய பிரச்னை இல்லை என்று அவர்கள் நினைத்து இருக்கலாம்.
பரிணாம வளர்ச்சியில் மனிதன் முதுகெலும்பை இழக்கபோகிறானோ என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே சாட்சியாய் இருக்கின்றன, உண்மையாய் முதுகெலும்பை இழப்பதுதான் இழப்பதல்ல
இதுபோன்றவற்றுடன் வழ்வதுகூட முதுகெலும்புடன் இல்லாமல் வாழ்வதற்கு ஒப்பானதே(என்னையும் சேர்த்துதான்).
பிள்ளையார் சதுர்த்தி
பிள்ளையார் சதுர்த்தி
இப்பொழுதெல்லாம் பிள்ளையார் சதுர்த்திக்கு பெரிய பெரிய பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபட்டு அவற்றை கடலில் கரைப்பது வழக்கமாகிவிட்டது.
நீங்கள் உங்கள் வீட்டில் வசித்து வருகிறீர்கள் யாராவது உங்கள் வீட்டில் நுழைந்து உங்கள் வீடு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மண் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்த சிலையை கரைத்தால் நீங்க என்ன செய்வீர்கள், அவர்களை வரவேற்று காபி கொடுத்து உபசரிபீர்களா இல்லை கட்டை எடுத்துக்கொண்டு துரத்துவீர்களா?
கடலில் வாழும் உயிரினங்கள் கரைக்கு வந்து நம்முடன் கத்தி சண்டை போட முடியாது என்பதாலேயே அவற்றின் வாழ்வியல் பகுதியில் அத்து மீறி சென்று இதுபோன்ற செயல்களை செய்வது எந்த விதத்திலும் ஞாயமேயில்லை.
இதை விட கொடுமையானது நம்முடைய அரசாங்கமும் இதற்கு பாதுகாப்பு அளித்து கிரேன் போன்ற வசதிகளை செய்து கொடுப்பதுதான்.
இது தமிழரின் மரபு வந்த வழிபட்டு முறை என்று எனக்கு தோன்ற வில்லை, விலங்குகளை தெய்வங்களாகவே போற்றுகின்ற இந்த மண்ணில் இது போன்ற செயல்களை நிறுத்த அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஈ மற்றும் எறும்புகளுக்கு அரிசி மாவில் கோலம் போட்டு உணவளித்த தமிழர்களாகிய நாம் இது போன்ற செயல்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
கடவுளை அடையும் வழி என்பது அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதும் உதவி செய்வதுமேயன்றி இதுபோன்ற செயல்களில் இல்லை, இது போன்ற மண் கரைப்பை கடவுளே கூட விரும்ப மாட்டார்.
சாக்கு மூட்டையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலைகள்.
இப்பொழுதெல்லாம் பிள்ளையார் சதுர்த்திக்கு பெரிய பெரிய பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபட்டு அவற்றை கடலில் கரைப்பது வழக்கமாகிவிட்டது.
நீங்கள் உங்கள் வீட்டில் வசித்து வருகிறீர்கள் யாராவது உங்கள் வீட்டில் நுழைந்து உங்கள் வீடு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மண் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்த சிலையை கரைத்தால் நீங்க என்ன செய்வீர்கள், அவர்களை வரவேற்று காபி கொடுத்து உபசரிபீர்களா இல்லை கட்டை எடுத்துக்கொண்டு துரத்துவீர்களா?
கடலில் வாழும் உயிரினங்கள் கரைக்கு வந்து நம்முடன் கத்தி சண்டை போட முடியாது என்பதாலேயே அவற்றின் வாழ்வியல் பகுதியில் அத்து மீறி சென்று இதுபோன்ற செயல்களை செய்வது எந்த விதத்திலும் ஞாயமேயில்லை.
இதை விட கொடுமையானது நம்முடைய அரசாங்கமும் இதற்கு பாதுகாப்பு அளித்து கிரேன் போன்ற வசதிகளை செய்து கொடுப்பதுதான்.
இது தமிழரின் மரபு வந்த வழிபட்டு முறை என்று எனக்கு தோன்ற வில்லை, விலங்குகளை தெய்வங்களாகவே போற்றுகின்ற இந்த மண்ணில் இது போன்ற செயல்களை நிறுத்த அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஈ மற்றும் எறும்புகளுக்கு அரிசி மாவில் கோலம் போட்டு உணவளித்த தமிழர்களாகிய நாம் இது போன்ற செயல்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
கடவுளை அடையும் வழி என்பது அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதும் உதவி செய்வதுமேயன்றி இதுபோன்ற செயல்களில் இல்லை, இது போன்ற மண் கரைப்பை கடவுளே கூட விரும்ப மாட்டார்.
சாக்கு மூட்டையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலைகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)