இது நீண்ட நாட்களாகவே என் மனதில் தோன்றிய ஒரு விஷயம், சில நேரங்களில் எரிச்சல் சில நேரங்களில் ஆத்திரம் சில நேரங்களில் இயலாமை சில நேரங்களில் கோபம் ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.
ஒன்னும் இல்லைங்க எந்த டிராபிக் சிக்னல் படுத்தும் பாடுதான், நம்ம ஊரில சிக்னல் ஒழுங்க இருந்தாலே யாரும் மதிக்க மாட்டங்க, இதுல எப்ப வொர்க் ஆகும் எப்ப வொர்க் ஆகாதுன்னே தெரியாது, நான் ரொம்ப நாள் கழிச்சுதான் அத கண்டு புடிச்சேன், காலையில நீங்க அவசரமவசரமா ஆபீஸ் போகும் பொது இந்த கிண்டி பாலத்த தான்ற வரைக்கும் ஒன்னும் தெரியாது பாலத்து மேல ஏறி ஏறங்குவீங்க பாருங்க அப்ப கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் நிக்கும் வண்டி, எனக்கு அப்பல்லாம் கம்பராமாயனத்துல ராமன் கூட போன குரங்கு ஞாபகம் தாம் வரும், ஒரு வண்டி குறுக்கால நாலஞ்சு வண்டிக அத சுத்தி நின்னுகிட்டு யாராலையும் போகமுடியாத மாதிரி ஒரு தினுசான கோணத்துல நிப்பாங்க, ஆனா சும்மா சொல்லக்கூடாது நம்ம ஆளுங்க தெறமையே தனி ஒரு நாள் நின்ன கோணத்துல மறு நாள் நிக்க மாட்டாங்க.
அதிலேயும் இந்த ஆட்டோ காரர்கள் ஓட்ற விதம் அப்பப்பா, எனக்கு மட்டும் இதை மூணு சக்கரத்தில ஓட்டலாம்னு கண்டுபிடிச்சது யார்னு தெரிஞ்சதுன்னு வைச்சுக்குங்களேன் என்ன பண்ணுவேன்னு கேட்குறிங்களா ஒண்ணுயம் பண்ண மாட்டேன், அவர கூட்டிட்டு வந்து சிக்னல் வேலை செய்யாத நேரத்த பாத்து கிண்டி பாலத்துல இருந்து அசோக் பில்லர் வரைக்கும் டெய்லி பத்து தரவ பைக் ஓட்ட சொல்லுவேன்.
எதுல என்ன கொடுமைன்ன இந்த சிக்னல் அப்ப அப்ப வேலை செய்யலன்னு அங்க நிக்கிற போலீஸ்க்கு தெரியும் இருந்தாலும் எது அவர்களை தடுக்குதுன்னு எனக்கு தெரியலை.
இது குறித்து கவலைப்பட யாருக்கும் நேரமில்லை, வாழ்க்கையை எப்படி ஓட்டுவது என்பதே பெரிய பிரச்சனையாய் இருக்கையில் எந்த டிராபிக்கில் வண்டி ஓட்டுவது ஒரு பெரிய பிரச்னை இல்லை என்று அவர்கள் நினைத்து இருக்கலாம்.
பரிணாம வளர்ச்சியில் மனிதன் முதுகெலும்பை இழக்கபோகிறானோ என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே சாட்சியாய் இருக்கின்றன, உண்மையாய் முதுகெலும்பை இழப்பதுதான் இழப்பதல்ல
இதுபோன்றவற்றுடன் வழ்வதுகூட முதுகெலும்புடன் இல்லாமல் வாழ்வதற்கு ஒப்பானதே(என்னையும் சேர்த்துதான்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக