பிள்ளையார் சதுர்த்தி
இப்பொழுதெல்லாம் பிள்ளையார் சதுர்த்திக்கு பெரிய பெரிய பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபட்டு அவற்றை கடலில் கரைப்பது வழக்கமாகிவிட்டது.
நீங்கள் உங்கள் வீட்டில் வசித்து வருகிறீர்கள் யாராவது உங்கள் வீட்டில் நுழைந்து உங்கள் வீடு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மண் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்த சிலையை கரைத்தால் நீங்க என்ன செய்வீர்கள், அவர்களை வரவேற்று காபி கொடுத்து உபசரிபீர்களா இல்லை கட்டை எடுத்துக்கொண்டு துரத்துவீர்களா?
கடலில் வாழும் உயிரினங்கள் கரைக்கு வந்து நம்முடன் கத்தி சண்டை போட முடியாது என்பதாலேயே அவற்றின் வாழ்வியல் பகுதியில் அத்து மீறி சென்று இதுபோன்ற செயல்களை செய்வது எந்த விதத்திலும் ஞாயமேயில்லை.
இதை விட கொடுமையானது நம்முடைய அரசாங்கமும் இதற்கு பாதுகாப்பு அளித்து கிரேன் போன்ற வசதிகளை செய்து கொடுப்பதுதான்.
இது தமிழரின் மரபு வந்த வழிபட்டு முறை என்று எனக்கு தோன்ற வில்லை, விலங்குகளை தெய்வங்களாகவே போற்றுகின்ற இந்த மண்ணில் இது போன்ற செயல்களை நிறுத்த அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஈ மற்றும் எறும்புகளுக்கு அரிசி மாவில் கோலம் போட்டு உணவளித்த தமிழர்களாகிய நாம் இது போன்ற செயல்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
கடவுளை அடையும் வழி என்பது அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதும் உதவி செய்வதுமேயன்றி இதுபோன்ற செயல்களில் இல்லை, இது போன்ற மண் கரைப்பை கடவுளே கூட விரும்ப மாட்டார்.
சாக்கு மூட்டையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக